Saturday 9 May 2009

வன்னியில் - இறந்தவர் மீண்டெழுந்த அதிசயம்


பிரபாகரனை அவரது தளபதி மாத்தையா கொன்றுவிட்டார் என்று இந்துப் பத்திரிகை செய்தி வெளியிட்டு பல ஆண்டுகள் சென்று விட்டன. பிரபாகரன் சுனாமியில் அடித்துச் செல்லப் பட்டுவிட்டதாகவும் இந்துப் பத்திரிகை அறிவித்தது. இறந்து உயிர்த்தெழுபவர்கள் தெய்வப் பிறவிகள் என்று சொல்வோரும் உண்டு.
விடுதலைப் புலிகளின் இராணுவத் துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையனை இலங்கை இராணுவத்திற்கு உளவு பார்த்தமையால் அவரைப் பகிரங்க இடத்தில் வைத்து மக்கள் முன் சுட்டுக் புலிகள் கொன்றதாக இலங்கை அரசு சென்ற மாதம் அறிவித்தது. இத்தகவலை இலங்கை அரசு வன்னியில் இருந்து தப்பி வந்தவர்கள் தெரிவித்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு மகிழ்ந்தன.
இளந்திரையன் இப்போது உயிர்த்தெழுந்து வந்து அவுஸ்ரேலியாவில் இருந்து வெளி வரும் தமிழ் வானொலிக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
முத்துக் குமாரனை விதைத்தோம்
காங்கிரசைப் புதைப்போம்

இந்தியாவின் குட்டு உடைகிறது. இலங்கைக்கு பல இராணுவ உதவிகள்






இலங்கைக்கு இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகளுடன் விடுதலைப்புலிகளை ஒழிக்க பல வகைகளிலும் உதவியது என இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கைக்கு இராணுவப் பயிற்ச்சி ராடார், உளவுத் துறைத் தகவல் என்பனவற்றை வழங்கியதுடன் விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிப்பதிலும் பல வகைகளிலும் உதவியது என்று அவர் கூறினார். புலிகளின் சர்வதேச கட்டமைப்பையும் இந்தியாவின் உதவியோடே சிதறடிக்கப் பட்டதென்றும் ரணில் கூறினார்.
யாருக்கு வாக்களித்தாலும் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்!
.
வரும் தேர்தலில் உங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி காங்கிரசைத் தோற்கடியுங்கள்!
.
வீரத் தமிழன் முத்துக்குமாரை விதைத்தோம்! காங்கிரசை ஆழக் குழிதோண்டிப்புதைப்போம்
!

களைத்தாலும் சளைக்காத பிரித்தானியத் தமிழர்.


பிரித்தானியப் பாராளமன்ற சதுக்கம் பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன்பாகவும் டயானாவின் இறுதிக்கிரியை நடந்த Westminster Abbey இற்கு அருகிலும் இருக்கிறது. தினமும் பல்லாயிரக் கணக்கான உல்லாசப் பயணிகள் இங்கு வந்து பிக் பென் கடிகாரத்துடன் படமெடுத்துக் கொள்வர்.

பிக்பென் கடிகாரம் 12 மணிகாட்டுகிறது. வெள்ளிக்கிழமை விடை பெறுகிறது சனிக்கிழமை வருகிறது. நடன அரங்குகளிலும் விடுதிகளிலும் மதுபானச் சாலைகளிலும் உல்லாசங்கள் ஓய்கிறது. இலண்டன் நகரம் கேளிக்கையில் களைக்கிறது. களைத்தாலும் சளைக்காமல் நள்ளிரவிலும் பல நுாற்றுக் கணக்கான தமிழர்கள் பாராளமன்ற சதுக்கத்தில் ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். பல்லாயிரம் மைல்களுக்க அப்பால் பரிதவிக்கும் தம் உறவுகளுக்காக. இது ஒரு மாதத்திற்கு மேலாக நடக்கிறது.

கடந்த ஏப்ரல் ஆறாம் திகதிபாராளமன்ற சதுக்கத்தில் சில மணித்தியாலங்களில் முடிப்பதாக அனுமதி பெற்று ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆர்பாட்டம் ஈழத்தில் ஆயிரக் கணக்கில் அப்பாவித் தமிழர்கள் வேதியியல் ஆயுதங்கள் பாவித்து கொல்லப் பட்டனர் என்ற சேதி வந்தவுடன். கைத்தொலைபேசிகளூடாகப் பல குறுந்தகவல்கள் பறந்தன. மேலும் பல தமிழர்கள் அங்கு திரண்டனர். தாம் தெருவில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தப் போவதாக மாணவர்கள் முதலில் காவல் துறையினரிடம் மன்றாட்டமாகக் கேட்டனர். அவரகள் மறுக்கவே அவர்களைத் தள்ளி விட்டு சாலை மறியல் போராட்டத்தில் கட்டுப்பாட்டுடனும் உறுதியுடனும் ஈடுபட்டனர். இரவு முழுக்க இது தொடர்ந்தது. மறுநாள் காலை கலைந்து செல்லும் படி காவலர்கள் விடுத்த வேண்டு கோளிற்கு செவி சாய்க்கவில்லை. விளைவு பெரும் போக்கு வரத்து நெருக்கடி. காவலர்கள் பின்னர் அவர்களை பலவந்தமாக அப்புறப் படுத்தினர். ஆனால் தமிழர்கள் பாராள மன்ற சதுக்கத்தில் மீண்டும் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில பாராளமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு தொடர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வாங்கிக் கொடுத்தனர். இந்த ஆர்பாட்டம் இன்று வரை தொடர்கிறது. இரவு பகலாக நடக்கிறது. பல பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பபை இடை நிறுத்திவிட்டு இங்கு தினசரி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முகங்களில் தெரிகிறது அவர்கள் எவ்வளவு துாரம் களைத்துப் போய் இருக்கின்றனர் என்று. களைத்தாலும் அவர்கள் சளைக்கவில்லை.

Friday 8 May 2009

சட்ட விரோதச் செயலுக்கு இந்தியா 100கோடி தமிழ்நாடு 25 கோடி.


இலங்கை அரசு சட்டத்திற்கு விரோதமாகவும் பன்னாட்டு நியமங்களுக்கு எதிராகவும் 192000 தமிழர்களை தடுத்து வைத்திருக்கிறது. இங்கு இவர்கள் தங்கள் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைத்திருந்து சொல்லோணாக் கொடுமைகளைச் செய்து வருகிறது. பெண்கள் பாலியல் வதைக்கு உள்ளாக்கப் படுகின்றனர். கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு. சிசுக்கள் கொல்லப் படுவதாகவும் தகவல். நாளைய புலிகள் என்று!!! மனைவிகள் கணவன்மார்களிடமிருந்து பிரிக்கப் பட்டு பாலியல் வதை. இராணுவத்தினர் வீடுகளில் கொத்தடிமைகள். படையினர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குளிக்க வேண்டும் உடை மாற்ற வேண்டும்.

இளைஞர்கள் தனியாக்கப் பட்டு நிர்வாணமாக்கப் பட்டுஇருவரை ஒன்றாகச் சேர்த்து கைகால்கள் கட்டப் பட்டு வைக்கப் பட்டுள்ளனர்.
இந்தக் கொடுமைகள் புரியும் இலங்கையுடன் நல்ல நட்புறவைப் பேண விரும்புகிறது இந்தியா!!! வெட்கக்கேடு.
இந்தக் கொடுமைகள் புரியும் இலங்கையின் பிராந்திய ஒருமைப் பாட்டைப் பேண விரும்புகிறது இந்தியா!!! வெட்கக் கேடு!!! வெட்கக் கேடு!!!
இத்தோடு நிற்கவில்லை இந்தியாவின் வெட்கங் கெட்ட செயல். கேவலமான இலங்கைக்கு இப்போது மோசமான பொருளாதாரப் பிரச்சனை. சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைப்பதில் தாமதம். இப் பிரச்சனையை தீர்க்க இந்திய ஆட்சியாளர்கள் ஒரு தந்திரத்தைக் கையாளுகின்றனர். இடைத்தங்கல் முகாம் எனப்படும் வதை முகாம்களைப் பராமரிக்க என்று சொல்லி இந்திய மத்திய அரசு 100கோடியும் உண்ணாவிரத நாடகக் கலைஞரின் அரசு 25 கோடியும் கொடுத்து உதவிசெய்ய விருப்பதாக இலங்கைப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
16 தொகுதிகளிலும் காங்கிரசு தோற்கட்டும்.

மாபெரும் இனக்கொலைத் திட்டம்


இனிவரும் இறுதிப் போரில் இலங்கை இராணுவம் பாரிய இழப்பைச் சந்திக்கவிருக்கிறது. அப்படி ஒரு சந்தர்பத்தைப் பயன் படுத்தி மும் முனைத் திட்டம் கொண்ட இன அழிப்பு நடக்க விருக்கறது.
.
பயங்கர ஆயுதப் பிரயோகம்
ஒரு திட்டம் போர் முனையில் பேரழிவு விளைவிக்கக் கூடிய ஆயுதங்களைப் பயன் படுத்தி தமிழர்களைக் கொன்று குவித்தல். இதற்கான ஆயுதங்கள் இப்போதே குவிக்கப் பட்டுள்ளன. இடைத் தங்கல் முகாம்களில் உள்ள மக்களைப் பராமரிப்பதற் கென்ற போர்வையில் இந்தியா பல கோடி ரூபாக்களை இந்தியா வாரி இறைக்கவிருக்கிறது. இப் பணம் மேலும் பயங்கர ஆயுதங்களை பாக்கிஸ்தானிடமிருந்து வாங்கவிருக்கிறது.
.

இடைத்தங்கல் முகாம்களில் கலவரம்
1983இல் வெலிகடைச் சிறைச்சாலையில் செய்தது போல இடைத்தங்கல் முகாம்களில் பாரிய கலவரம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் பெரும் தமிழின அழிப்பை ஏற்படுத்துதல்.
.

நாடாளாவிய இனக் கலவரம்
நாடாளிவிய ரீதியில் ஒரு இனக் கலவரம் ஏற்படுத்தி தமிழர்களுக்கு பெரும் உயிரழிப்பும் சொத்தழிப்பும் ஏற்படுத்துதல். இதன் மூலம் பொருளாதாரப் பிரச்சனையால் தவிக்கும் சிங்களக் காடையர் கூட்டத்தின் பணப் பிரச்சனையையும் தீர்கும் திட்டமும் அடங்கும்.
இனிப் பல தலைமுறைக்கு தமிழர்கள் உரிமைப் போராட்டத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கவும் முடியாமல் செய்வோம் என்று கோத்தபாய ராஜபக்ச அவர்கள் கூறியதை இங்கு நினைவு

Thursday 7 May 2009

கணவனுக்கு 40வது பிறந்த நாள் பரிசு - ஒரு வருட உன்னத பாலியல் உத்தரவாதம்



பிறந்தநாளுக்கு என்ன பரிசு கொடுப்பது என்பது பலருக்கு பெரிய பிரச்சனை. சார்லா என்ற அமெரிக்காவின் வட கரோலினாவைச் சேர்ந்த பெண் ஒரு புதுமையான பரிசாகத் தனது கணவனின் 40வது பிறந்த நாளுக்கு வழங்கினார்.
அவர் கொடுத்த பரிசு ஒரு வருட கட்டிலின்பத்திற்கான உத்தரவாதம். இதை அவரது கணவர் பிரட் முல்லர் தனது 365 இரவுகள் என்ற நூலில் வெளியிட்டுள்ளார்.
.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
.
முகநூலில் (Facebook) அழவைத்த அறிமுகம்

முக நூலில் நண்பர்கள் பலர் கண்டதுண்டு
அறிமுகத்திலேயே பாராட்டுவோருண்டு
கேலி செய்வோருண்டு திட்டுவோருண்டு
சில நிமிடங்களில் நட்பைத் துண்டித்தோருமுண்டு
ஆனாலும் அழ வைத்தார் ஒரு நண்பன்
அறிமுகமான சில நொடியில் ஹாய் என்றான்
முகவரியில் அழகிய சிறுமியின் படம்
அமைதியான அழகு முகமுடைய சிறுமி
எப்படி என்றேன் துக்கம் என்றார்
ஏன் என்றேன் தன்னூர் புதுக்குடியிருப்பென்றார்.
பலிகொடுத்தேன் என் சிறு தங்கையை என்றார்
அவள் படம் தான் தன் முகவரிப் படம் என்றார்.
மெல்லக் கசிந்தன என் கண்கள்

பொருளாதார மந்தத்திலும் கவர்ச்சீகரமான உள் ஆடை விற்பனை பிரித்தானியாவில் அதிகரிப்பு


பிரித்தானியாவின் பொருளாதார மந்த நிலையால் பல வியாபார நிறுவனங்கள் தமது விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிவித்த வேளையில் பிரபல கவர்ச்சிகரமான உள்ளாடை உற்பத்தி நிறுவனமொன்று தமது விற்பனை எட்டு விழுக்காட்டால் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

பிறப்பு வீதமும் அதிகரிக்குமாம்.
பொருளாதாரப் பிரச்சனையால் இரவு நேரங்களில் மக்கள் வெளியே சென்று கேளிக்கைகளில் ஈடுபடாமல் வீட்டிலேயே கேளிக்கயில் ஈடுபடுவதால் குழந்தைகள் பிறப்பு வீதம் அதிகரிக்கும் என்று ஒரு பத்திரிகை எதிர்வு கூறியுள்ளது.


இத்தாலிச் சனியாளிற்கு
தமிழினக் கொலையாளிக்கு
வாக்களிப்போரை
வரலாறு மன்னிக்காதே!

முத்துக் குமாரனை விதைத்தோம்
காங்கிரசைப் புதைப்போம்

விடுதலைப் புலிகள் இந்தியாவின் நண்பர்கள் - இந்திய அதிகாரவர்கத்திற்கு அது தேவையில்லை.




தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் இந்தியாவின் நண்பர்கள் என்பதைப் பலமுறை வலியுறுத்தியுள்ளனர். இந்திய ஆட்சியாளர்கள் இதைக் கருத்தில் கொள்வதில்லை. விடுதலைப் புலிகள் இந்திய நலன்களுக்கு எதிராக செயல் பட்டதுமிலை. சிங்கள அரசும் சிங்கள மக்களும் இந்தியாவிற்கு எதிரான மனப்பாங்கையே கொண்டுள்ளனர் என்பதை இந்திய ஆட்சியாளர்கள் நன்றாக அறிவர். இருந்தும் ஏன் இந்திய ஆட்சியாளர்களிடம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இந்த நிலைப்பாடு? இராஜீவ் காந்தி கொலை என்று சுலபமாகச் சொல்லிவிடலாமா? ராஜீவைக் கொன்றவர்கள் யார்? என்ற கேள்விக்கே விடையில்லை! ராஜீவ் கொலைக்கு முன்பே விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாடு இருந்தது. இந்திரா காந்தி அம்மையார் இருக்கும் போதே ரெலோ இயக்கமும் இந்தியப் படைகளும் சேர்ந்து புலிகளை அழித்தொழிக்கும் திட்டம் போடப்பட்டது. புலிகள் முந்திக்கொண்டு ரெலோ இயக்கத்தை சின்னாபின்னப் படுத்தினர். ராஜீவ் காந்தி கொலை செய்யப் படாமல் இருந்தாலும் இந்திய ஆட்சியாளர்கள் புலிகளுக்கு எதிரான நிலைப் பாட்டோடுதான் இருந்திருப்பர் என்றார் முன்னாள் காங்கிரசு உறுப்பினர் தமிழருவி மணியன். இதே கருத்தைப் பலரும் முன் வைத்துள்ளனர்.
>
ஏன் இந்த விடுதலைப் புலிகள் எதிர்ப்பு நிலைப்பாடு?
1. ஒரு சாமனியன் தலமைப் பதவிக்கு வந்துவிட்டான்.
2. சாதியத்தை உடைத்தெறிந்த இயக்கம் வெற்றி பெறக்கூடாது.
>
ஒரு குடும்பம்தான் இந்தியாவை ஆட்சி செய்ய முடியும் என்ற நிலைப் பாடும் உயர்தர வர்க்கத்தினர் தான் ஆட்சியாளர்களாக வரமுடியும் என்ற நம்ம்பிக்கையும் கொண்டவர்கள் விடுதலைப் புலிகளை என்றும் எதிர்ப்பர்.

Wednesday 6 May 2009

நினைவுகள் ஏன் நீங்குவதில்லை?

அந்த முன் பள்ளியில்

மிக மிக அண்மையில்...



அந்த தேர்த் திருவிழாவில்

மக்கள் நெரிசலில்....



அந்தக் குலுக்கும் பேரூந்தில்

அருகருகில்......



அந்த இராணுவ அட்டூழியத்தில்

அகதி முகாமில்



அந்த கடலோரத்தில்

தாழை மரத்தடியில்...



அந்த உணவகத்தில்

மெழுகு திரியொளியில்..



அந்த கேளிக்கை விடுதியில்

நடன மாடுகையில்....


அந்தத் தனியறயில்

ஒரு சிறு கட்டிலில்...



அந்த மணவறையில்

இன்னொருத்தன் அருகில்!!!!!

சோனியா காந்தி வருவார் ஆனால் வரமாட்டார்


தமிழ்மண்ணில் காலடி
வைக்க முயன்றாள்
தமிழின எதிர்ப்புக் கண்டாள்
பீதியடைந்தாள்
பேதிகொண்டாள்.
.
.
ஈழத்தமிழனைக் கொல்லக்
கொலைவாள் கொடுத்த கொடியோள்
ஆரியப்பேய்களின் ஆதிக்கவெறிக்கு
ஆதரவு கொடுக்கும் சனியாள்
அவர்தம் பண்புப்படி கூறுவோமானால்
புகுந்தவீட்டை கூறு போட்டவள்
காலடி எடுத்து வைத்த ராசி
மைத்துனன் மண்டையைப் போட்டான்
மாமியும் சல்லடையானாள்
கைப்பிடித்தோன் சிதறினான்
அயல் நாட்டில் இன அழிப்பு
ஐய்யோ என்னதான் முடிவோ?

அன்பர் Ananth Sn அவர்களின் பின்னூட்டம்
லூசு பெண்ணே ..!
லூசு பெண்ணே ..! !
லூசு பெண்ணே ..! ! !

லூசு கிழவன் உன்மேலதான் ...
லூசா Hospitala இருக்கிறான்..!

ஓட்டு வராதே ..!
ஓட்டு வராதே ..!

தமிழ் நாட்டு ஓட்டு
உனக்கு வராதே ..!


Tuesday 5 May 2009

பாலியல் வதைக்குள்ளாகும் தமிழ்பெண்கள் - பிரத்தானியத் தொலைக்காட்சி தகவல்

பிரத்தானியத் தொலைக்காட்சியான சனல்-4 இலங்கையில் சிங்களக் கொடுங் கோலர்களின் படையினர் இடைத்தங்கல் முகாம் எனக் கூறும் வதை முகாம்களில் தமிழ்ப் பெண்களை மோசமான பாலியல் வதைக்கு உட்படுத்துவதை அம்பலப் படுத்தியுள்ளது. இம் முகாம்களை நடாத்த இந்தியா கோடிக் கணக்கான பணத்தை இறைத்துள்ளது. இம் முகாம்கள் சட்ட விரோதமானவை என்று Inner city press பல முறை தெரிவித்துள்ளது.

செல்வி ஜெயலலிதாவின் எழுச்சியும் பார்ப்பனர்களின் மெளனமும்




செல்வி ஜெயலலிதாவின் ஈழப் பிரச்சனை தொடர்பாக அண்மைக்கால பேச்சு மாற்றம் பலரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இது பேச்சு மாற்றம் மட்டுமா அல்லது மனமாற்றமா என்ற கேள்வியும் எழவே செய்கிறது. ஆனால் இது பல ஈழத்தமிழர்களின் வயிற்றில் பால்வார்த்தது உண்மையே. ஈழத் தமிழர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேரில் பலத்த ஏமாற்றத்தையே அடைந்துள்ளனர். திமுக தமது முதுகில் குத்திவிட்டதாகவே உறுதியாக நம்புகின்றனர். திமுக ஒரு நாளும் தமிழர்களுக்கு உருப்படியாக எதுவும் செய்ததில்லை என்று கூறுவோரும் உண்டு. உண்ணாவிரத நாடகம் கலைஞரை ஈழத்தமிழர்கள் கடுமையாக விமர்சிக்கும் நிலைக்குத் தள்ளியது.
.
செல்வி ஜெயலலிதாவின் கையைப் பற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் தான் ஈழ தமிழர்கள் உள்ளனர். அவர்களின் இன்றைய நிலை அப்படி. ஆனால் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பது ஈழத் தமிழ் எதிர்ப்பாளர்களான சோ இராமசாமி ஹிந்து ராம் சுப்பிரமணிய சுவாமி போன்றோர் செல்வி ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் தொடர்பான பேச்சுக்களுக்கு எந்த விமர்சனமும் தெரிவிக்காமல் இருப்பது ஏன்?

Monday 4 May 2009

பலத்த இழப்புக்களுடன் தீவிரமடையும் போர். - துடிக்கும் சனியாள்




எஞ்சி இருக்கும் 5 கிலோ மீட்டர் பகுதியை மீட்க சிங்கள-ஆரிய கூட்டமைப்பு பலத்த முயற்ச்சியை மேற்கொண்டுள்ளது. இதனால் சிங்களப் படைத்தரப்பு பலத்த இழப்பைச் சந்தித்துள்ளது. கடல் வழியாக படைகளை இறக்க மேற்கொண்ட மூன்று முயற்ச்சிகள் தோல்வியில் முடிந்தன. புலிகளின் நீரடி அதிரடிப்படை சிங்களக் கடற்படைக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தின. நீருந்து விசைப் படகுகள் சில தாக்கி அழிக்கப் பட்டன. பல பீரங்கிப் படகுகள் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடின.
வேதியியல் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு செய்து வருகிறது.


அவசரமாக மேலதிக ஆயுதங்கள் தேவைப் படுகிறது.

சிங்களப் படைகளுக்கு போரை முடிக்க மேலதிக ஆயுதங்கள் அவசரமாகத் தேவைப் படுகிறது. அவற்றை அனுப்ப சனியாளின் அரசு மேற்கொண்ட முயற்ச்சியை தமிழ்நாட்டில் உள்ள தமிழின உணர்வாளர்கள் முறியடித்தனர்.
இரண்டு காரணங்களுக்காக போரை உடன் முடிக்க வேண்டிய நிர்பந்தம் ஆரிய-சிங்களக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது:


1. சனியாள் அதிகாரத்தில் இருக்கும் போது தமிழனை அழித்துவிடு.
தேர்தலின் பின் என்ன நடக்கும் என்று தெரியாது. சனியாள் அதிகாரத்திலிருந்து துாக்கி எறியப்பட்டால் என்ன நடக்கும் என்ற அச்சம் சிங்களவர்களை ஆட்டிப் படைக்கிறது. சனியாள் ஆட்சியிலிருக்கும் போதே தமிழர்களைத் தீர்த்துக் கட்ட வேண்டும் என்பதே ஆரிய-சிங்களக் கூட்டமைப்பின் விருப்பம்.
2. உலகெங்கும் உள்ள தமிழர்களின் போராட்டம்.
தமிழர்கள் உலகெங்கும் இலங்கை அரசுக்கு எதிராக நுணுக்கமாகத் திட்டமிட்டு செயற்படுகின்றனர். பல முக்கிய அரசுகளைத் தமக்கு ஆதரவாகத் திரட்டி வருகின்றனர். இதைப் பார்த்து இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சொன்னார் இவர்கள் பிரபாகரன் இல்லாமலே தமிழீழம் அமைத்து விடுவார்கள் என்று. பிரித்தானியாவும் பிரான்சும் தமது வெளியுறவுத் துறை அமைச்சர்களை இலங்கைக்கு அனுப்பின. அவர்களால் அங்கு எதையும் சாதித்து விடவில்லை. ஆனால் அவர்களிடம் இலங்கை அரசு இரு உறுதி மொழிகளை வழங்கியது: 1. கனரக ஆயுதங்கள் பாவிக்கப் படமாட்டாது. 2. போர் முனையில் சிக்குண்டிருக்கும் மக்களுக்கு உகந்த உதவிகள் வழங்கப்படும். அவரகள் தமது நாடுகள் திரும்பி இதை அங்குள்ள தமிழர்களிடம் தெரிவித்தபோது தமிழர்கள் சொன்னார்கள் இலங்கை அரசு இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டாது என்று. தாம் அதை உன்னிப்பாக அவதானித்து உரிய நடவடிக்கைகளை எடுப்போம் என்று தமிழர்களிடம் பிரித்தானிய அரச அறிவித்துள்ளது. இதேவேளை இவ்விரு நாடுகளைவிட அமெரிக்கா தமிழர் பிரச்சனை தொடர்பாக திரைமறைவில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆக மொத்தத்தில் இன்னும் இரு வாரங்களுக்குள் போரை முடிவுக்கு கொண்டு வராவிடில் ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு பாரிய திருப்பு முனையைச் சந்திக்க வேண்டி வரும்.

Sunday 3 May 2009

சோனியா காந்தி அம்மையார் ஒரு செத்துப் போன ஆன்மா



“மாபெரும் மனிதப் பெருந்துன்பம் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, செத்துப் போன ஆன்மா மட்டுமே பாதிக்கப்படாமல் இருக்கும்” என்று இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியான ராஜீவ் டோக்ரா இலங்கையில் நடக்கும் இனக்கொலை தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இந்த ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்புப் படி 8500 இற்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஐநா சொல்கிறது இது ஒரு மதிப்பீடு என்று. இம் மதிப்பீடு மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து பெறப்பட்டது. மருத்துவ மனைக்கு போகாத இறப்புக்களையும் சேர்த்தால் நிச்சயம் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்தும் இலட்சக் கணக்கானோர் அவயங்களை இழந்தும் உள்ளனர். இப்பத்தாயிரம் இறப்புக்களும் இலட்சக் கணக்கான அவயங்களை இழந்தோரையும் ஒருவர் மனதைப் பாதிக்கவில்லை என்று தெரிகிறது. அவர்தான் சோனியா காந்தி அம்மையார்.
சோனியா காந்தி அம்மையார் இலங்கை அவலங்கள் தொடர்பாக மெளனமாக இருப்பதற்குக் காரணம் அவரது கணவர் கொலையில் இலங்கைத் தமிழர் சம்பத்தப் பட்டிருப்பது தான் என்று அவரது ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் சொல்கிறார்கள். அவரது அரசு இலங்கை அரசிற்கு சகல உதவிகளையும் வழங்குகிறது.
.

சோனியா அம்மையாரின் கணவரின் மரணம் தொடர்பாக
ஒரு அன்பர் அனுப்பிய இ-மடல் இப்படி இருந்தது:
ஜாலியன் வாலபாக் படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான் உதம் சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை ( Michael O'Dwyer) பழி வாங்க துடிகிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான். உதம் சிங்குக்கு தெரிய வருகிறது Michael O'Dwyer மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று.உதம் சிங், அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் செய்கிறான். இங்கிலாந்து சென்று சர்வர் வேலை செய்து கொண்டே Michael O'Dwyer ஐ தேடுகிறார்.... 21 ஆண்டுகள் தேடி கடைசியாக 13-Mar-1940 ஆண்டு கண்டு பிடித்து Michael O'Dwyer ஐ கொல்கிறான். மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறார் அவர்கள் மூன்று பெரும் படுகாயமடைந்து (Lord Zetland, Luis Dane and Lord Lamington) பிழைத்து கொள்கிறார்கள் உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அவருக்கு மரண தண்டனை அளித்து 31-July-1940 இல் தூக்கில் இடுகிறார்கள். உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400 மக்களை கொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார்.பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்கள் இந்தியா கொண்டு வரப்பட்டு அஸ்தி கங்கையில் கரைக்கப் படுகிறது. அவருடைய உடல் பிரதமர், ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்று புகழ்ந்துரைகிறார்கள்.
.
சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம். 400பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று Michael O'Dwyer கொன்றதனால் தியாகி என்கிறோம் நாம்..... ராஜிவ்காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதிப் படை ஈழத்திற்கு சென்று 8000 பொது மக்களை மற்றும் 5000 பெண்களை கற்பழித்து கொன்றதற்கு சுபா இந்தியாவில் ஒருவனை கொன்றால் அது தவறா?

இப்போது சொல்லுங்கள் சோனியா காந்தி அம்மையார் ஒரு செத்துப் போன ஆன்மாதானே!!!







Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...