Saturday 23 May 2009

பிரபாகரனின் மரணம் பற்றி வாய் திறக்கவில்லை


பிரபாகரன் பதின்மூன்று வயதில் ஆயுத போராட்டத்தை ஆரம்பித்ததிலிருந்து வாழ்க்கையில் பல சாதனைகள் புரிந்ததுண்டு.
...
தனது சொந்த மரணச் செய்தியை பல தடவை கேட்டவர்கள் வேறுயார்?
..
பிபிசி இணையத் தளம் பிரபாகரனின் இறப்புக் கட்டுரையை வெளிவிட்டது. தனது இறப்புக் கட்டுரையை பிபிசீயில் பார்க்கும் பாக்கியம் யாருக்குத்தான் கிட்டும்
..
பிரபாகரனின் மரணம் பற்றி வாய் திறக்கவில்லை
தொலைக்காட்சியொன்றின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் இலங்கையில் நடந்த போரில் தாம் செய்த சாதனைகளைப் பற்றித் தம்பட்டமடித்த கோத்தபாய ராஜபக்சே பிரபாகரனின் மரணம் பற்றி வாய் திறக்கவில்லை.
.....
பிரபாகரன் புதிதாகச் செய்த சாதனை கூகுளின் தேடு பொறியில் மிக அதிகம் தேடப்படும் நபராக இருந்த நமீதாவை பின் தள்ளி தான் முதலாவதாக வந்துள்ளார். நமீதா இந்தியாவில் முதலாவதாக இருந்தார். பிரபாகரன் உலகளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
உலகெங்கும் வாழ் தமிழர்கள் செய்யும் கவன ஈர்ப்புப் போராட்டத்திற்கு பயன் கி்டைக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழர் பிரச்சனையில் இப்போது உலகம் அக்கறை காட்டத் தொடங்கியிருக்கிறது.

Friday 22 May 2009

உலகெங்கும் வாழ் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்களா?


நேற்று பிரித்தானியப் பாராளமன்ற சதுக்கத்தில் தமிழ்த் தேசிய போராட்டத்தில் நீண்டகால ஈடுபாடுள்ள ஒரு பெரியவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. தமிழ்த்தேசிய போராட்டம் கீழ் முகமாகச் செல்கின்றதா என்று அவரிடம் வினவினேன். சற்று யோசித்து அண்ணாந்து சிலகணம் வானத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னார். இங்கு ஆர்ப்பாட்டம் செய்யும் இளைஞர்களைப் பார்க்கும் போது 1972 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராய்ச்சி மாநாடு தனது நினைவிற்கு வருவதாகக் கூறினார். அந்த மாநாடு நடந்த போது அப்போது இளைஞர்கள் என்ன மனநிலையில் இருந்தார்களோ அதே மனநிலையில் இந்த இளைஞர்கள் இருக்கிறார்கள். அந்த மாநாட்டு முடிவில் இலங்கை காவல்துறை மின்சாரக் கம்பிகளைத் துண்டித்தும் கண்ணீர்ப் புகை அடித்தும் மக்களைக் கொன்றதைத் தொடர்ந்து தமிழர்கள் ஆயுத போராட்டத்தை ஆரம்பித்தனர். இப்போது இங்குள்ள இளைஞர்களுக்கும் விரக்தி ஏற்பட்டால் இவர்களில் ஒரு பகுதியினர் ஆயுதங்களைக் கையில் எடுப்பார்கள். இவர்கள் ஆயுதம் கையெடுத்தால் அது எவரும் எதிர்பாராத வடிவமாக இருக்கும். ஆம் அந்தப் பெரியவர் சொல்வது நடப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. ஐரோப்பாவிலாகட்டும் கனடாவிலாகட்டும் அல்லது அவுஸ்திரெலியாவிலாகட்டும் இந்த இளைஞர்களுக்கு பலநாட்டு இளைஞர்களின் தொடர்புகள் உண்டு. அந்தத் தொடர்புகளும் அனுபவங்களும் இவர்களுக்கு இன்னொரு பரிமாணத்தில் பலமூட்டும்.
.
தமிழர்கள் ஏமாற்றப் பட்டனர்.
.மேற்குலக நாடுகள் இலங்கைப் பிரச்சனைப் பேசி ஒரு முடிவு கட்டவேண்டும் அல்லது சண்டை மூலம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற முடிவை 2000-ம் ஆண்டில் எடுத்துவிட்டன. இலங்கையில் நடக்கும் சண்டை அங்கு அவர்களது வர்த்தகரீதியான சுரண்டலுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவே அவர்கள் உணர்ந்தனர். இணைத் தலைமை நாடுகள் என்று தம்மைத் தாமே அழைத்துக்கொண்ட அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே இலங்கைப் பிரச்சனைக்கு இராணுவத்தீர்வு இல்லை என்று சொல்லிவந்த போதும் விடுதலைப் புலிகளை ஒழிப்பதில் இலங்கையுடன் உடன்பட்ட நிலையிலேயே இருந்தன. ஆனால் இலங்கையின் புலி அழிப்புப் போர் மாபெரும் இன அழிப்புப் போராக முடியும் என்பதை அவர்கள் எதிர் பார்க்கவில்லை. இலங்கையில் கடந்த சில மாதங்களாக நடந்த கொடூரம் முழுக்க அவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். சாட்சியங்களும் அவர்களிடம் உண்டு. அவற்றை அவர்கள் இலங்கை அரசு சீனாவின் பக்கம் சாரமல் இருப்பதற்கான மிரட்டலுக்கு பயன் படுத்துவார்கள். உலகெங்கும் வாழ் தமிழர்கள் போர் நிறுத்தம் வேண்டி ஆர்பாட்டம் செய்ததை இவர்கள் தட்டிக் கழித்து விட்டு தாம் எதாவது செய்வோம் என்று சொல்லிக் கொண்டு காலத்தை கடத்தினர். அது அவர்கள் இலங்கை அரசிற்கு தேவையான கால அவகாசத்தைக் கொடுக்கவே என்ற சந்தேகம் இப்போது தமிழர்கள் மத்தியில் எழத் தொடங்கிவிட்டது. இணைத் தலைமை நாடுகளின் நோக்கம் புலி ஒழிப்பிற்கு பிறகு ஏதாவது செய்வோம் என்பதே. இந்த விடயத்தில் தாம் இணைத் தலைமை நாடுகளால் ஏமாற்றுப் பட்டுவிட்டதாகவே தமிழர்கள் நம்புகின்றனர். இந்த ஏமாற்றம் என்ன விளைவை ஏற்படுத்தும்?
.
பிழையாகிப் போன புலனாய்வுத் தகவல்
விடுதலைப் புலிகளைத் தடை செய்யமுன்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமிழர்கள் மத்தியில் ஒரு புலனாய்வுத் தகவலைத் திரட்டின. அதன் படி மூத்த தலை முறையினர் மட்டுமே இலங்கப் பிரச்சினையில் அக்கறை உள்ளவர்கள். இளைய தலைமுறையினர் தமது கலாச்சாரத்துடனும் நாடுகளுடனும் ஒன்றி விடுவார்கள். இத்தகவல்கள் இப்போது ஐரோப்பாவின் முக்கிய நகரங்கள் எங்கும் பொய்ப்பிக்கப் பட்டுக் கொண்டுடிருக்கிறது. தமக்குத் தாமே தீ மூட்ட ஆற்றில் பாய்ந்து தற் கொலை செய்ய முயற்சிக்க இளையோர் உண்டு என்றால் ஆயுதம் எடுத்துப் போராட்வும் அவர்கள் மத்தியில் இளையோர் தயாராக உள்ளனர் என்றுதான் கொள்ள வேண்டும்.

Thursday 21 May 2009

இந்தியா ஏன் பிரபாவையும் பொட்டுவையும் தப்பவிட்டது


பிரபாகரன் மரணம் சம்பந்தமாக இலங்கை அரசின் குட்டு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உடை படுகிறது. பல இணையத் தளங்கள் ராஜபக்சே இறந்து கிடப்பது போலவும் அவர் பிரபாகரனின் காலில் விழுந்து கெஞ்சுவது போலவும் படங்களைப் போட்டுக் கேலி செய்கின்றன.

நக்கீரன் பத்திரிகை புலிகளின் தலமைப் பீடம் தப்பிவிட்டதாக ஒரு நீண்டகட்டுரை வெளியிட்டுள்ளது. அது பிரபாகரன் கையில் தான் கொல்லப்பட்டதான செய்தியைக் கொண்ட பத்திரிகையைக் கையில் வைத்துக் கொண்டு தனது "இறந்த உடலை" தொலைக்காட்சியில் பார்த்துச் சிரிப்பது போல முற்பக்க படத்தையும் பிரசுரித்துள்ளது. இது இலங்கை அரசிற்கு விடுக்கும் சவால்! உனது படம் உண்மையென்றால் இதுவும் உண்மைதானே!

ஆனால் இப்போது முக்கியமான பகுதி

இந்தியா ஏன் புலிகளின் தலமைப் பீடத்தைத் தப்பவிட்டது? தேர்தல் முடிந்துவிட்டது. தமிழர்களின் வாக்குகளுக்காக தப்ப விடவில்லை. மத்தியில் செல்வாக்கிழந்து நிற்கும் தமிழ்நாட்டுத் தலைவர்களின் வேண்டுதலுக்குப் பணிந்து செய்திருக்க வாய்ப்பில்லை. யாரோ(?) செய்த ராஜீவ் கொலைக்கு ஏன் பழி வாங்கவில்லை?

நக்கீரன் இப்படிச் சொல்கிறது:
சிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு.

ஏன் இந்த உத்தரவு? தமிழ்த் தேசிய வாதம் என்று இலங்கையில் முற்றாக ஒழிக்கப் படுகிறதோ அன்றே இந்தியாவின் பிடியிலிருந்து இலங்கை நழுவிவிடும். சிங்கள-பெளத்தப் பேரினவாதிகள் அனைவருமே மிகக் கடுமையான இந்திய எதிர்ப்பாளர்கள். அது மட்டுமல்ல சீனாவுடன் நெருக்கமான் உறவைப் பேணுபவர்கள். தமிழ்த் தேசிய வாதம் உயிருடன் இருக்கும் வரையிலேயே இந்தியாவல் இலங்கையைத் தன் பிடியில் வைத்திருக்க முடியும்.

இந்தியாவிற்கு எதிராக சீனா முத்து மாலை என்ற திட்டத்தின் கீழ் இந்து சமுத்திரத்தில் தனது வல்லாதிக்கத்தை நிலைநாட்ட பல கடற்பபடைத் தளங்களை உருவாக்குகிறது. இது சம்பந்தமாக இந்தியாவிற்கு சீனா போடும் சுருக்குக் கயிறு எனும் கட்டுரையை கீழ் உள்ள இணைப்பில் காணலாம்:
http://veltharma.blogspot.com/2009/05/blog-post_17.html

எந்த ஒரு கட்டத்திலும் விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கு எதிரான நிலைப் பாட்டை எடுத்ததில்லை. எடுக்கவும் மாட்டார்கள் என்பதை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் உணர்ந்து விட்டனரா?

Wednesday 20 May 2009

பத்தாயிரம் யூரோக்களுக்கு இணையத்தில் விலை போன கற்பு



தனது கணனிக் கல்விக்குத் தேவையான பணத்தைப் பெறுவதற்கு 18 வயது ஜெர்மனிய மாணவி தனது கற்பை இணையத்தில் ஏலம் போட்டார். 45 வயதான இத்தாலிய வியாபாரி ஒருவர் பத்தாயிரம் யூரோக்களுக்கு அதை வாங்கினார்.
.
இருவரும் வெனிஸ் நகரத்தில் சந்தித்து முதலில் நகரை வலம் வந்து பின்னர் உல்லாச விடுதியில் இரவைக் கழித்தனர். இந்த அனுபவம் மிகவும் இனிமையாக இருந்ததாகவும் Pretty Woman திரைப் படம் போல இருந்ததாகவும் அலினா எனும் அந்த மாணவி தெரிவித்தார். தான் அவரை மறுமுறை சந்திப்பதற்கு பணம் கேட்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Plastic fabrication of Prabhakaran's death


A plastic fabrication artist called Lasantha Rajasinghe was involved in the "Praba killed drama" according to the news going around in Colombo.

People all over world are anxiously waiting to see the body of Soosai the head of LTTE’s naval force. The official website of the Ministry of Defense of Srilanka,
www.defece.lk reported : LTTE's sea tiger wing leader Soosai's bullet ridden body has been found by troops this evening. According to the defence sources, army commandos engaged in search and clear operations in the marshy land in Karayamullavaikkal have made this finding.
More information will follow...
. Let us wait for more information.

.

Meanwhile it is reported that the Tamil National Alliance parliamentarian Mr.S.Kanagaretnam who was trapped in Vanni during the recent military operation launched by the Sri Lanka Army, is missing.

பிரபா உடல் - தனக்குத் தானே சேறு பூசிக் கொண்ட இலங்கை அரசு








திங்கட் கிழமை இலங்கை அரசு இந்திய வெளி விவகார அமைச்சைத் தொடர்பு கொண்டு பிரபாகரனைத் தாம் கொன்று விட்டதாக அறிவித்தது. அவரது உடல் எரிந்து கருகிய நிலையில் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்தது. நெருங்கிய நண்பனுக்குத் தெரியும் தானே இலங்கையின் திருகு தாளங்களும் தில்லு முல்லுக்களும். எனவே இந்தியா ராஜுவ் கொலை வழக்கை மூடுவதற்கு எமக்கு நீதி மன்றில் சமர்ப்பிக்கக் கூடிய வகையில் விஞ்ஞானபூர்வமான சாட்சியங்களைச் சமர்ப்பிக்கும் படி விநயமாக இலங்கையைக் கேட்டுக் கொண்டது. பேந்தப் பேந்த விழித்த இலங்கை அரசு தனது நாடகத்தை மாற்றத் திட்டமிட்டது. வடிவேலு பாணியில் சொல்வதானால் றூம் போட்டு யோசிக்க நேரமில்லை. பிரபாகரனைப் போன்ற ஒரு உடலைத் தேடி(?) எடுத்தது. அவசர அவசரமாக அந்த உடலுக்கு ஏற்ற ஒரு முகம் தயார் செய்யப் பட்டது.பிரபாகரனின் படங்கள் யாவிலும் அவர் தொப்பியுடனேயே காணப்படுவார். பிரபாகரன் தலை வழுக்கை எத்தகையது என்ற குழப்பம். கால அவகாசம் இல்லை! உடன் செய்த வேலை தலையை மறைத்து படங்கள் எடுக்கப்பட்டன. இப்போது உடல் சேற்றுக்குள் இருந்து எடுத்ததாகக் காட்டவேண்டும். அவசர அவசரமாக சேறு பூசப்பட்டது. மேல் உள்ள படத்தில் தெரிகிறது எவ்வளவு அவசரமாகச் சேறு பூசப் பட்டதென்று. இலங்கை இராணுவம் துரத்த பிரபாகரன் ஆடைகளைக் களைந்து விட்டு ஓடிப் போய் சேற்றில் விழுந்து விட்டாரா????????

எனக்கு வருகுது வாயிலை....

Tuesday 19 May 2009

Some doubts over the dead body of Prabhaharan




Prabhaharan was killed again - 16th time. The state media of Srilanka reported with the photo of his dead body. However there are some doubts over this report:

You can see a photo of Praba taken on 26th November 2004 above and the photo published by the Srilankan state media today(19/05/2009). How he became younger over 4 years?

How he lost his wrinkles?

Hove you ever seen a dead body?
Have you ever seen a dead body with clear eyes like this?


Have you ever seen a dead body of a man killed in action? How the face of a man killed in action with severe pain look like these?

Prabakaran was under 24 hours siege for the lase few weeks. Has he got time for a clean shave?

பிரபாவின் இறந்த உடல் - சில சந்தேகங்கள்



பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அதற்கு மேல் முதலாவதாக உள்ள படம் 2004-கார்த்திகை 26 எடுக்கப் பட்டது.

4 வருடங்களுக்கு மேலாகிய பின்பு அவர் 2009இல் இளமையாகத் தோற்றம் அளிப்பது எப்படி?

முகத்தில் இருந்த சுருக்கங்கள் எங்கே? நாடியில் உள்ள பிளவு எங்கே? 

தலையில் காயம்பட்டதால் ஏற்பட்ட இரத்தப் பெருக்கால் முகம் ஏன் சுருங்கவில்லை. இறுதி நேர இறப்பு வேதனையின் சுவடுகள் எதுவும் முகத்தில் இல்லை. 

இறந்தவர்களின் உடல்களைப் பார்த்தவர்கள் சொல்லுங்கள் இறந்தவர்களின் கண்கள் இப்படியாகவா இருக்கும்?

கொல்லப் பட்டவர்களின் உடல்களைப் பார்த்த அனுபவமுள்ளவர்கள் சொல்லுங்கள். கொல்லப் பட்டவரின் முகம் இப்படியா இருக்கும்?

இருபத்தி நான்கு மணி நேர தாக்குதலுக்கு உள்ளான ஒரு பிரதேசத்தில் இருந்த பிரபாகரன் இப்படி கனகச்சிதமாக சவரம் செய்திருப்பாரா?

Monday 18 May 2009

சதி அம்பலம் - பிரபாகரன் உயிருடன் இருப்பதாக புலிகள் அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக தமிழீ விடுதலைப் புலி்களின் சர்வ தேசப் பேச்சாளர் செல்வராஜா பத்மநாதன் அறிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறையும் பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்து மகிழ்ந்தது.

பிரபாகரன் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள இலங்கை இந்திய உளவுப் படையினரின் ஒரு சதி இந்த இறப்பு அறிவிப்பு என்று கூறப்படுகிறது.

பிபிசி இந்தச் செய்தியை வெளியிட்டு இறப்பு அறிவித்தலையும் செய்துள்ளது.

டோராப் படகுகள் எங்கே? புலிகளின் தலைமை எங்கே?


இலங்கைக் கடற்படையிடமிருந்து இரண்டு டோராப் படகுகள் உட்பட பல படகுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் கைப்பற்றி இருந்தனர். அந்தப் படகுகள் இப்போது எங்கே? அவற்றை மீளக் கைப்பற்றியதாகவோ அல்லது அவற்றை தாமோ அல்லது புலிகளோ அழித்ததாகவோ இது வரை எந்தத் தகவலும் இலங்கை அரச தரப்பிலிருந்து வரவில்லை. இப்படகுகள் எங்கு சென்றன? எப்போது சென்றன? மூன்று வாரங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் பகுதியில் இருந்து ஒரு படகு தப்பி ஓடியது. அதைக் கைப்பற்று முகமாக இலங்கைக் கடற்படையினர் துரத்திச் சென்றபோது அது கடற்படையினர் அண்மையில் சென்றவுடன் வெடித்துச் சிதறியது. துரத்திச் சென்ற படகும் வெடித்து இலங்கைக் கடற்படையினர் கொல்லப் பட்டனர். இது புலிகள் முன்பு செய்யாத ஒஐ உத்தி. இதன் நோக்கம் கடற்படையினரின் கவனத்தைத் திசை திருப்பி விட்டு வேறு படகுகள் தப்பிச் செல்லவா? அதில் தப்பிச் சென்றவர்கள் யார்?

இலங்கை - அமெரிக்காவின் பங்கு எங்கே?


மஹாபல்லி அரசனின் யாகத்தை குழப்ப திருமால் வாமன அவதாரம் எடுத்து ஒரு சதி செய்தாராம். மஹாபல்லி யாகம் செய்த முடிவில் எல்லோருக்கும் தானம் கொடுத்து முடிந்த நிலையில் ஒரு சிறு ரிஷிபோல் திருமால் வாமனன் அவதாரம் எடுத்து வந்தார். அவருக்குக் கொடுக்க மஹாபல்லியிடம் எதுவுமில்லை. வாமனனும் தாயாள மனம் படைத்தவன் போல் தனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் மூன்றடி மண் மட்டும் போதுமென்றார். மஹாபல்லி மனம் மகிழ்ந்து எடுத்துக் கொள்ளும்படி சொன்னான். வாமனனும் தனது இரண்டு அடியால் மூன்று உலகையும் அளந்து விட்டு மூன்றாவது அடி எங்கே என்று கேட்க மஹாபல்லி தன் தலை மேல் வைக்கும் படி வேண்டினான். வாமனன் தனது காலை மஹாபல்லி மேல் வைத்து அவனைக் கொன்றார்.
.
இலங்கையில் அம்பாந்தோட்டையில் சீனாவிற்கு கொடுத்தாயிற்று. திருமலையை இந்தியாவிற்கு கொடுத்தாயிற்று. கண்ணிவெடி அகற்றுவதென்ற போர்வையில் மேலும் இந்தியப் படை வரவிருக்கிறது. அப்போ அமெரிக்காவின் பங்கு எங்கே? கடைசியில் வாமனன் வந்த மாதிரி அமெரிக்கா வருமா? மூன்றாம் அடி யார் தலையில்?

Sunday 17 May 2009

காணொளி - இலண்டனில் ஒரு மண்டலம் கண்ட தமிழர் ஆர்ப்பாட்டம்


சில சித்த வைத்தியர்கள் ஒரு மண்டலம் இந்த மருந்தை சாப்பிடுங்கள் சுகம் வரும் என்று கொடுப்பார். அதாவது 40 நாட்கள் சாப்பிடவேண்டும். தமிழர்கள் 40 நாட்களுக்கு மேலாக பாராளமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இன்னும் பலன் கிடைக்கவில்லை.

இந்தியாவிற்கு சீனா போடும் சுருக்குக் கயிறு


சீனா இந்தியாவைச் சுற்றி மறைமுக கடற்படைத் தளங்களை அமைத்துவருகிறது. உலக வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பகுதி இந்து மாக்கடலுாடாகவே நடக்கிறது. இந்தப் பாரிய கடல் பிரதேசம் தனது கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ள சீனா ஒரு நீண்டகாலத் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது.
.
இந்தியாவின் வடபகுதி முழுக்க எதிரிகளான சீனாவினதும் பாக்கிஸ்தானுடன் உள்ளது. நேப்பாளமும் பங்களா தேசமும் இந்தியச் சார்பான நாடுகள் அல்ல. இந்தியாவின் எனைய எல்லைகள் யாவும் கடற்பரப்பாகும்.பாக்கு நீரிணை இந்திய மீனவர்களின் கொலைக்களம்.
இந்நிலையில் பாக்கிஸ்த்தானில் குவாடார் துறைமுகத்தில் சீனா பலமான மறைமுகத் தளம் அமைத்துள்ளது. இது அரபுக் கடலில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்குடன் அமைக்கப் பட்டதாகும்.
.
இலங்கையில் அம்பாந்தோட்டையில் மிகப் பெரும் செலவில் ஒரு துறைமுகத்தை அமைத்து வருகிறது. இது மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்துமாக்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட உதவும் சீனாவிற்க்குத் தேவையான பெற்றோலியம் அரபியநாடுகளில் இருந்து இவ்வழியாகவே செல்கிறது. இதில் சீனாவும் ஈரானும் இணைந்து இலங்கையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் வெற்றி கண்டுள்ளது.
.
மியன்மாரில்(பர்மா) சிட்வே என்னும் இடத்திலும் பங்களாதேசத்தின் முக்கியமான சிட்டகொங்கிலும் சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இவை வங்கக் கடலில் தனது ஆதிக்கத்தை பலப்படுத்தும் நோக்கத்துடன் சீனாவால் அமைக்கப் பட்டுள்ளன.
.
மேற்கூறிய நான்கு துறைமுகங்களும் இந்தியாவைச் சுற்றி சீனா போட்டுள்ள சுருக்குக் கயிறு.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...