Saturday 10 March 2012

இலங்கையில் ஓர் இனக்கலவரம் வரலாம்

இனக்கலவரம் என்பது இலங்கையில் அவ்வப்போது நடந்து வந்த ஒன்று. இலங்கையில் ஆட்சிபீடத்தில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி ஏற்படும்போது சிங்களவர்களின் ஆத்திரத்தை திசை திருப்பவும் அவர்களின் விரக்திக்கு ஒரு வடிகாலாகவும் ஆட்சியாளர்கள் இனக்கலவரத்தைப் பாவிப்பார்கள். 1983இற்குப் பின்னர் இலங்கையில் இனக்கலவரம் நாளாந்தம் நடந்து கொண்டிருக்கின்றது. இலங்கைப் படையினருக்கோ அல்லது காவற்துறையினருக்கோ பணத் தட்டுப்பாடு என்றால் அவர்கள் சோதனை என்ற போர்வையில் ஒரு தமிழரின் வீட்டுக்குள் சென்று அங்குள்ளவற்றைச் சூறையாடிச் செல்வதும், அகப்பட்ட ஒரு தமிழரைக் கைது செய்து கப்பப் பணம் வாங்குவதும். சோதனைச் சாவடியில் அகப்பட்ட தமிழனிடம் உள்ளவற்றைச் சுருட்டுவதும் நாளாந்த நடவடிக்கைகள். இப்படிப் பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இப்போது இலங்கையில் ஆட்சியில் இருப்பவர்களுக்குப் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன:
  •  பொருளாதார நெருக்கடி: உலகெங்கும் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சனைகள் இலங்கையிலும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை இப்போது தனது வெளிநாட்டுச் செலவாணிக்கு மத்திய கிழக்கில் பல இன்னல்களுக்கு மத்தியில் பணிபுரியும் அப்பாவிகளின் உழைப்பிலேயே தங்கியுள்ளது. உலகப் பொருளாதார வீழ்ச்சியால் இந்த வருமானம் பாதிக்கப்படவும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதிகள் வீழ்ச்சியடையவும் இலங்கையின் அந்நியச் செலவாணி இருப்பு விழ்ச்சி கண்டது. இதனால் இலங்கையின் நாணய மதிப்பு விழ்ச்சியடைந்தது. அதைத் தடுக்க இலங்கை மத்திய வங்கி தனது வெளிநாட்டு நாணயக் கையிருப்பை விற்றது. அது மேலும் அந்நியச் செலவாணிக் கையிருப்பைக் குறைத்தது. இந்தப் பிரச்சனைச் சுற்று இலங்கையின் நாணய மதிப்பில் மேலும் தாக்கம் ஏற்பட அதைத் தடுக்க முடியாத நிலையில் இலங்கை மத்திய வங்கி இருக்கிறது. இதனால் பாரிய விலைவாசி அதிகரிப்பு இலங்கையில் ஏற்படத் தொடங்கிவிட்டது. அத்துடன் விவசாயிகளின் வருமானத்திலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தப் போகிறது.
  • தொழிற்சங்கப் பிரச்சனை: பல தொழிற்சங்கங்கள் இப்போது ஆட்சியாளர்களுக்கு எதிராக மாறியுள்ளன. தொடர் வேலை நிறுத்தங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
  • மாணவர்கள் பிரச்சனை: பல மாணவர் அமைப்புக்கள் ஆட்சியாளரகள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த காலங்களில் அவர்களது ஆர்ப்பாட்டங்களை அரசு கையாண்ட விதங்கள் அவர்களின் ஆத்திரத்தை கிளறி விட்டுள்ளன.
  • உட் கட்சிப் பிரச்சனை: ஆளும்  கட்சியின் பாராளமன்ற உறுப்பினர்கள் பலர் ஆட்சியாளர்கள் நாட்டில் உள்ள பிரச்சனைகளையும் மக்கள் எதிர்ப்புக்களையும் கையாண்ட விதங்களை இட்டு அதிருப்தி அடைந்துள்ளனர். சிலர் தாம் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் மிரட்டுகின்றனர்.
  • பன்னாட்டு அரங்கில் பெரும்பாடு: இப்போது மஹிந்த ராஜபக்சவை தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளச் செய்யும் பிரச்சனை மனித உரிமை மற்றும் போர்க்குற்றப் பிரச்சனை. இது தற்போது நடக்கும் ஜெனிவா மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடருடன் முடியப்போவதில்லை. இப்பிரச்சனை இன்னும் அதிகரித்துச் செல்லும்.
அடுத்த குடியரசுத் தலைவர்த் தேர்தல் வரை இலங்கை இனப்பிரச்சனையை இழுத்தடித்து அடுத்த தேர்தலிலும் அமோக வெற்றியடையலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ச இப்போது தனது பதவிக் காலம் முடியும் வரை பதவியில் இருப்பேனா என்ற கவலையில் மூழ்கியுள்ளார். இவற்றில் இருந்து விடுபட ஜெனிவாவில் தனக்கு எதிரான தீர்மானம் ஏதாவது நிறைவேற்றப்பட்டால் தமிழர்கள் தன்னைப் பழிவாங்கி விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்து  ஒரு இன விரோதத்தை இலங்கையில் கிளறி விட்டு ஒரு இனக் கலவரத்தைத் தூண்டி அதன் மூலம் சிங்கள மக்களின் விரக்த்திக்கு ஒரு வடிகால் தேடுவது மஹிந்தவிற்கு ஒரு வழியாக அமையலாம். தமிழர் தேசியக் கூட்டமைப்பு  ஜெனீவாவில் நடக்கும் மனித உரிமைக்கழகக் கூட்டத் தொடருக்குச் சென்று தமது தரப்பு நியாயத்தை முன்வைக்காமல் தடுக்க இந்த இனக் கலவரப் பூச்சாண்டி பயன் படுத்தப் பட்டிருக்கலாம்.

    Wednesday 7 March 2012

    என்று முடியும் இந்த இந்தியத் துரோகம்?

    ஆரியர்களைப் பொறுத்தவரை தமிழன் சூத்திரன் அவன் ஆளப்படவேண்டியவன்; அவன் ஆளக்கூடாது. இந்த அடிப்படையில்தான் இந்தியா தமிழ் ஈழத்தையும் தமிழர்களி விடுதலைப் போரையும் அன்றிலிருந்து இன்றுவரை எதிர்த்து வருகிறது. ஆனால் இதைப் பல தமிழர்கள் இன்னும் உணராமல் இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது.

    ஜவகர் லால் நேரு

    தமிழ் அரசியல் கட்சியான தமிழ் காங்கிரசுக் கட்சியின் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் இலங்கை பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்ட பின்னர் இலங்கை வாழ் தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணக்க முற்பட்டார். அவர் தனது காங்கிரசையும் இந்தியாவிலிருந்து வந்து இலங்கையின் மலைநாட்டுப்பகுதியில் குடியேறிய தமிழர்களின் தலைவராக இருந்த ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் இயங்கிய தோட்டத் தொழிலாளர் காங்கிரசையும் ஒன்றிணைக்கும் தனது எண்ணத்தை திரு எஸ் தொண்டமான் அவர்களிடம் தெரிவித்தார். திரு தொண்டமானுக்கும் இது நல்ல ஆலோசனையாகப்பட்டது . தொண்டமான் இது தொடர்பாக அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அவர்களிடம் ஆலோசனை கேட்டார். பேரினவாதியான நேரு, தொண்டமானைப் பெரும்பான்மை சமூகத்துடன் ஒத்துழக்குமாறு பணித்தார். தொண்டமானும் அதன்படியே பொன்னம்பலத்தின் ஆலோசனையை நிராகரித்தார். ஆனால் சிங்களப் பேரினவாதிகள் தோட்டத்தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்தபோது தொண்டமான் நேருவிடம் முறையிட்டார். நேரு இது உள்நாட்டு விவகாரம் என்று பகிரங்கமாகச் சொல்லித் தட்டிக் கழித்தார். இங்கு ஆரமபமானது இந்திய ஆட்சியாளர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு அள்ளி வைப்பது.

    சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தம்
    இதன் பின் 1964இல் இந்தியா இலங்கையுடன் சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தம் சர்வதேச நியமங்களுக்கு எதிராக கைச்சாத்திட்டு 150,000 தமிழர்களை நாடற்றவர்களாக்கியது. இலங்கையில் வாழ் அனைத்து தமிழர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த போதிலும் அவர்களின் எதிர்ப்பிற்கு செவி சாய்க்காது அப்போதையஇந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்த்திரி இந்திய - பாக்கிஸ்த்தான் போரில் இலங்கையைப் பாக்கிஸ்த்தான் பக்கம் சாயாமல் தடுப்பத்ற்காக தமிழர்களின் வாழ்வைப் பலி கொடுத்தார்.

    இந்திரா காந்தியின் சதி

    1977இற்குப் பிறகு இலங்கையில் அமெரிக்கா திருக்கோணாமலையில் சிங்கப்பூர் நிறுவன மொன்றின் பெயரில் தனது கடற்படைகளுக்கான எரிபொருள் மீள் நிரப்பு வசதிகளையும் சிலாபத்தில் அமெரிக்கா ஒரு வானொலி அஞ்சல் நிலையம் என்ற போர்வையில் தனது கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான தொடர்பாடல் வசதிகளையும் ஏற்படுத்த முயன்றது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பதை உணர்ந்த அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கையைத் தனது வழிக்குக் கொண்டுவர தமிழர்கள் முதுகில் ஏறினார். தமிழர்கள் மத்தியில் பல ஆயுதக் குழுக்களை உருவாக்கி  படைத்துறைப் பயிற்ச்சி வழங்கி இலங்கை அரசுக்கு எதிரான படை நடவடிக்கைகளை அக்குழுக்களைக் கொண்டு செய்வித்தார். அந்தக் குழுக்களிடை ஒரு முரண்பாட்டு நிலையையும் உருவாக்கினார். ஆர்ப்பாட்டங்கள் உண்ணா விரதங்கள்  சத்தியாக் கிரகங்கள் என இருந்த தமிழர் சிங்களவர்களுக்கு இடையிலான பகைமை ஒரு பெரும் ஆயுதப் போராக உருவெடுத்து சிங்களவர்களும் தமிழர்களும் நிரந்தர விரோதிகளாகினர். தமிழர்களை ஆயுதபாணிகளாக்கி சிங்களவர்களுடன் சண்டையிட வைத்து பின்னர் சிங்களவர்கள் பக்கம் சேர்ந்து தமிழர்களை அழித்தொழிக்க சகல உதவியும் செய்து தமிழர்களை நிர்க்கதி ஆக்கியது இந்தியா.

    ராஜீவ் காந்தி
    இந்திரா காந்தி கொல்லப்பட்டபின்னர் இந்தியப் பிரதமராக வந்த அரசியல் கற்றுக் குட்டியான ராஜீவ் காந்தி இலங்கையில் தமிழர்கள் படைபலத்தில் வளர்ந்து செல்வதைப் பொறுக்காமல் அதற்கு முற்றுப் புள்ளி வைக்க தனது  படையை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களை கொன்று குவித்தார். தமிழ் ஆயுதக் குழுக்கள் யாவற்றையும் தன்னிடம் ஆயுதங்களை ஒப்படைக்கும் படி வற்புறுத்தினார். தமிழர்களின் பாதுகாப்புக்கு தான் உறுதி என்று பொய் கூறி தானே தனது படையினர் மூலம் தமிழர்களைக் கொன்றார். தமிழர்கள் இலட்சக்கணக்கில் இடப்பெயர்வுக்கு உள்ளாகினர். இலட்சக் கணக்கான தமிழர்கள் வீடுகள் அழிக்கப்பட்டன. பல தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். தமிழர்களை ஏமாற்ற இலங்கை அரசியல் அமைப்பிற்கு 13வது திருத்தம் என ஒன்று கொண்டுவரப்பட்டது. அது நிறைவேற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை என திரைமறைவில் சிங்களவர்களுக்கு சொல்லப்பட்டது.

    மாலைதீவுத் தாக்குதல்
    மாலை தீவை இந்திய தனது வழிக்குக் கொண்டுவர தமிழ் ஆயுதக் குழுக்களில் ஒன்றை அங்கு அனுப்பி ஆட்சி மாற்றத்திற்குப் போராட வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா மாலைதீவில் ஒரு கடற்படைத் தளம் அமைத்தது. மாலைதீவில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட பழி தமிழர்கள் மீது போடப்பட்டது.

    சதீஸ் நம்பியார்
    2002 விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கைச்சாத்திடப் பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழர் பிரதேசங்களில் அமைக்கப் பட்டிருந்த உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து இலங்கைப் படைகள் வெளியேறத் தயாராக இருந்த வேளையில் இந்தியா தனது சதீஸ் நம்பியாரை இலங்கைக்கு அனுப்பி அதைத் தடுத்தது. இந்தியா தமிழர்களுக்கு செய்த கணக்கில்லத் துரோகங்களில் அதுவும் ஒன்று.

    சம்பூர் சதி

    இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சம்பூரில் இந்தியா மின் உற்பத்தி நிலையம் அமைக்கவென அங்கு வாழ்ந்த தமிழர்களை  இலங்கைப் படையினர் இந்தியாவின் உதவியுடன்அடித்து விரட்டினர். அவர்கள் ஆறு வருடங்களுக்கு மேலாக ஏதிலிகளாக அகதி முகாம்களில் வாழ்கின்றனர்.

    இறுதிப் போர்
    இலங்கையில் சிங்களப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் தொடங்கும். சிங்களப் படைகளின் கைகள் ஓங்கி அவர்கள் முன்னேறும் நிலை ஏற்பட்டால் விடுதலைப் புலிகள் பின் வாங்குவது போல் பின்வாங்கிக் கொண்டே சிங்களப் படைகள் மீது தாக்குதல் தொடுத்து ஆளணி இழப்புக்களை சிங்களப்படைகளுக்கு ஏற்படுத்துவார்கள். முன்னேறும் படைகள் மீது அவ்வப்போது பக்கவாட்டில் ஊடறுப்புத் தாக்குதல்களும் பின்னால் சென்று பின்னிருந்து தாக்குதல்களும்  நடக்கும். இதனால் ஏற்படும் ஆளணி இழப்புக்களையும் காயப்பட்டு களமுனையில் இருந்து வெளியேறும் ஆளணிக் குறைவையும் சமாளிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் சிங்களப்படைகள் பின்வாங்கும். பல சிங்களப் படையினர் உயிர் தப்புவதற்காக தம்மைத் தாமே காயப் படுத்திக்கொண்டு களமுனையில் இருந்து வெளியேறுவர். பலர் தப்பி ஓடுவர். 2009இலும் கடும் போர் நடந்த போது சிங்களப்படைகளுக்கு ஏற்பட்ட ஆளணி இழப்புக்களை இலங்கையின் அயல் நாடு ஒன்றில் இருந்து வந்த படையினர் ஈடு செய்தனர். முதலில் 10,000 படையினரும் பின்னர் இன்னொரு 10,000 படையினரும் அந்த அயல் நாட்டில் இருந்து வந்தனர். பல சிங்கள ஊடகங்கள் இதை அம்பலப்படுத்தின. அவை பொட்டு வைத்த படையினரும் தலைப்பாகை அணிந்த படையினரும் இலங்கையில் தமிழர்க்கு எதிரான போரில் பங்கேற்பதை புகைப்படங்கள் காணொளிகள் மூலம் அம்பலப் படுத்தின. இப்படைகள் எந்த நாட்டில் இருந்து வந்தன என்பதை எம்மால் இலகுவில் ஊகிக்க முடியும்.

    பேரழிவைத் தடுப்பதைத் தடுத்த நாடு எது

    2009 இறுதிப் போரின்போது இலங்கை அரசு போர் முனையில் வெறும் 70,000 மக்கள் மட்டுமே இருக்கின்றனர் என்று  பொய் சொல்லியது. அதை அப்போதைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சரியென வாதிட்டார். ஆனால் இந்தியாவிற்கு அதன் உளவுத்துறை மூலமும் செய்மதிப் படங்கள் மூலமும் போர் முனையில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அகப்பட்டுள்ளனர் என்று தெரியும். போரால் பல பொது மக்கள் கொல்லப் படப் போகிறார்கள் என்பதை உணர்ந்த மேற்கு நாடுகள் குறிப்பாக பிரான்ஸும் பிரித்தானியாவும் இலங்கையில் ஒரு படை நடவடிக்கை மூலம் அப்பாவிப் பொது மக்களைப் பாதுகாக்க முற்பட்ட போது அதைத் தடுத்த நாடு எது? அமெரிக்காவிடம் இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யப்போவதாக எம்மிடம் உறுதியளித்துள்ளது என்று பொய் சொன்ன நாடு எது?

    முட்கம்பி வேலி
    2009 போருக்குப் பின்னர் பல இலட்சம் தமிழர்கள் ஏதிலிகளாக முட்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டதை பல நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் கண்டித்தன. அனர்த்தம் காரணமாக ஒரு நாட்டில் வீடிழந்தவர்களுக்கு அரசு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால் அவர்களை முட்கம்பிகளுக்குள் துப்பாக்கி முனையில் தடுத்து வைத்திருக்க முடியாது. அவர்களுக்கு நடமாடும் சுதந்திரம் இருக்கவேண்டும். இதைத்தான் சகல மனிதாபிமானமுடையோரும் மனிதாபிமான அமைப்புக்களும் நாகரிக வளர்ச்சியடைந்தவர்களும் எடுத்துக் கூறுகின்றனர். இந்தியாவின் கருத்து வேறு விதமாக இருந்தது. இந்திய பாராளமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் கருத்து: சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன.

    சனல் - காணொளி தொடர்பான இந்திய விசாரணை
    2009 போருக்குப் பின்னர் சனல் - 4 தொலைக்காட்சி இலங்கை போர்க்குற்றம் தொடர்பான முதல் காணொளியை வெளிவிட்டவுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சு அவசர அவசரமாக ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த விசாரணைக்கு என்ன நடந்தது என்று இது வரை தெரியவில்லை. இலங்கையில் நடந்த போர்க்குற்றத்திற்கு இந்தியாவின் பங்களிப்புத் தொடர்பான காணொளிக்காட்சிப்பதிவுகள் ஏதாவது இருகிறதா என்றா இந்தியா அவசரப்பட்டு விசாரணைகு உட்பட்டது.

    2009இல் மனித உரிமை மீறலைப் பாராட்டிய எருமை இந்தியா

    2009மே மாதத்தில் இலங்கைப் போர் முடிந்தவுடன் அதற்கு இந்தியா வழங்கிய பங்களிப்பு சரித்திரதில் இடம்பெறாமல முடி மறைக்கப்படலாம் என ஒரு படைத்துறை ஆய்வாளர் எழுதினார். இலங்கையில் அதிபர் மஹிந்த ராஜ்பக்ச உடபடப் பலர் நாம் இந்தியாவின் போரை நடாத்தி முடித்தோம் என்றும் இந்தியாவின் உதவியின்றி நம்மால் போரை நடாத்தி முடித்திருக்க முடியாது என்றும் தெரிவித்து வருகின்றனர். போர் முடிந்தவுடன் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை அழைத்து இந்தியா தன்னிடம் இலங்கை போர்க்குற்றம் புரிந்தமைக்கான செய்மதி ஆதாரப் படங்கள் இருப்பதாகக் கூறி இனி நீங்கள் எம் சொற்படி கேட்க வேண்டும் என்று கூறினர். இந்தியாவின் நோக்கம் இலங்கையில் 13வது திருத்தத்தை அமூல் படுத்த இந்தியா சொல்வதை இலங்கை கேட்க வேண்டும் என்பதே.  அப்போது இலங்கை போரின் போது கொழும்பு டில்லி இடையிலான உரையாடல்களின் ஒலிப்பதிவுகள் தம்மிடம் இருப்பதாகக் கூறி அதை தாம் அம்பலப் படுத்துவோம் என்றார். அதன் பின்னர் இந்தியா அடங்கி விட்டது. இதன் பின்னர் இலங்கை சொற்படி ஆடிய இந்தியா 2009இல் ஜெனிவாவில் நடந்த மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடரில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் போரின் போது மனித உரிமைகள் மீறியதைக் கண்டிக்கும் தீர்மானத்தை மனித உரிமைக் கழக நாடுகளிடை கடும் பிரசாரம் செய்து அதை இலங்கைக்குப் பாராட்டும் தீர்மானமாக மாற்றியது. அப்படிச் செய்ததை இலங்கைப் போரின் பொறுப்புக் கூறல் தொடர்பாக அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு பெரிய தவறு எனச் சுட்டிக்காட்டியது.

    தேர்தலுக்கு முன்னர் போரை முடி என்ற இந்தியா

    2009இல் போர் ஆகஸ்ட் மாதம் வரை போகும் என இலங்கை படையினர் திட்டமிட்டிருந்தனர்.2009 மே மாதம் இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் இலங்கையில் போர் முடிக்க வேண்டும் என இந்தியா இலங்கையை வற்புறுத்தியது. அப்பாவிகள் உயிரிழப்பைப் பற்றிக் கவலைப்படாமல் போரை நடத்த வேண்டும் என்று இந்தியா இலங்கையை வற்புறுத்தியது. அதற்கான ஆதாரங்கள் இலங்கையிடம் உள்ளன. அவற்றை இலங்கை பகிரங்கப்படுத்தினால் இந்தியா மீது போர்க்குற்றம் புரிந்ததாகக் கொள்ளப்பட வாய்ப்புண்டு.  இதை வைத்துக்கொண்டுதான் இலங்கை இந்தியாவைத் தன் எண்ணப்படி ஆட்டிப்படைக்கிறது.

    2012 ஜெனிவாவிலும் இந்தியா தமிழர்களுக்கு எதிராகவே செயற்படும்

    அண்மைக் காலங்களில் இந்தியா ஒரு இலங்கையின் சில்லறைக் கைக்கூலி போல் செயற்பட்டு வருகிறது.  அப்படிப் பட்ட இந்தியாவால் இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைக் கழகத்தில் வாக்களிக்க முடியாது. தமிழ்நாட்டு மக்களின் "கொந்தளிப்பை" கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் டில்லிக்கு இல்லை. அவை வெறும் கூச்சல்கள் மட்டுமே என்று டில்லி நன்கு அறியும். தேர்தலில் காங்கிரசுக் கட்சி தமிழ்நாட்டில் பெரும் தோல்வியைச் சந்திக்கலாம் என்ற பயம் ஆளும் கட்சிக்கு இல்லை. ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டால் என்ன எதிராகச் செயற்பட்டால் என்ன காங்கிரசுக் கட்சி தமிழ்நாட்டில் தோல்வியடைவது நிச்சயம். தமிழ்நாட்டில் வெற்றி பெற்று வரும் கட்சிக்கு சில மந்திரிப்பதவிகளைக் கொடுத்து அவற்றை கூட்டணியில் இணைத்து காங்கிரசால ஆட்சி அமைக்க முடியும். இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படாவிடில் இந்தியாவின் தமிழர்களுக்கு எதிரான பல குற்றங்கள் அம்பலமாகும்.

    ஆட்சி மாறினால் காட்சி மாறுமா?
    உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகளில் இந்தியக்கைக்கூலிகளாகச் செயற்படும் தமிழர்கள் சிலர் இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு அதைச் சார்ந்து தான தமிழர்கள் தம் விடுதலைக்காக எதையாவது செய்ய முடியும் என்ற பரப்புரைகளைச் செய்து வருகின்றனர். இந்தியா தமிழர்களுக்குச் செய்யும் துரோகச் செயல்களை அவர்களிடம் எடுத்துச் சொன்னால் இப்போது இருக்கும் ஆட்சி மாறினால் தமிழர்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும் என்று சொல்கின்றனர். இப்போது பெரிய நாடுகள் எதுவும் தமது வெளிநாட்டுக் கொள்கைகளை ஆட்சியாளர்கள் மாறும் போது மாற்றுவது இல்லை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அதன் அதிகார மையமான தென்மண்டலத்தில் உள்ள பார்ப்பனர்களே நிர்ணயிக்கின்றனர்.  இலங்கையின் தமிழர்களின் அவலத்திற்கு அவர்களே காரணம். அவர்கள் ஒரு போதும் தமிழர்கள் உரிமையுடன் வாழ் அனுமதிக்கப் போவதில்லை. இந்தியக் கைக்கூலிகள் வைக்கும் இன்னொரு கருத்து தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வலைக்கு மதிப்பளித்து இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் என்பது. இந்திய வெளியுறவுக் கொள்கை இந்தியாவின் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு வகுக்கப்படவேண்டும் ஒரு மாநிலத்தின் மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு வகுக்கப்படக் கூடாது என்று தென்மண்டலப் பார்ப்பனர்கள் கருதுகின்றனர். தென்மண்டலப் பார்ப்பனர்கள் இலங்கையில் தமிழர்கள் உரிமை பெறாமல் இருக்க இந்தியத் தேசிய நலன்களையும் பலியிடத் தயாராக இருக்கின்றனர். தமிழர்கள் இனி மாற்றி யோசிக்க வேண்டும்

    Tuesday 6 March 2012

    Selected SMS Jokes

    If you think your
    Dad,
    Mom,
    Teacher or
    Boss
    is Strict or
    Harsh on you...
    Wait for a Wife...
    You would love them all...!!

    Dreams are not those
    which are seen during sleep in the nights,
    Dreams are those
    which do not let you sleep.

    Memories Behave In A Crazy Way… They Leave You Alone When You Are In The Crowd But When You Are Alone, They Stand Around You Like A Crowd….


    Most Of Us Work On The Principle Of Rockets…
    It Doesn’t Necessarily Mean.. We Aim For The Sky….
    It Simply Means That We Don’t Start Working Unless The Ass Is On Fire..!!

    Post Graduation Speech- “First, I’d Like To Thank #GoogLe…… SecondLy, I’d Like To Thank Copy And Paste..!!”

    Easily achieved things do not stay longer
    And
    Things which stay for longer are not easily achieved
    True in all cases from success to relationship…

    Wife Hints To Husband At a New Car Saying-
    Buy Me Somthing That Goes 0 To 80 In 3 Seconds When I m On It
    Husband
    Gifted Her A
    Weight Machine!

    A man got two wishes from God.
    He asked for the best Drink and Best Woman.
    The next moment he got Bisleri and Mother Teresa.
    Moral of the story – Investment matters are subject to market risks.
    Please read the offer document carefully before investing..

    In Life Love Is Neither Planned
    Nor Does It Happen For A Reason…
    But When The Love Is Real
    It Becomes Your Plan For Life
    And Reason For Living..!


    I may not be the 'perfect friend',
    I also may not be the "best' of them all,
    but I am the one who wanna see u
    *happy forever*.

    Facebook is the second
    most popular word that
    starts with "F" and ends
    with "K".
    Can anyone tell me the first word?

    Monday 5 March 2012

    நகைச்சுவைக் கதை: கடவுளிடம் சட்ட அறிஞர்கள் இல்லை

    நல்ல பல பண்புகளைக் கொண்ட ஒரு மருத்துவரும் ஒரு பொறியியலாளரும் தவறாக வாகனத்தை ஓட்டிய போது ஒரு ஆலயத்தின் சுவரில் மோதி இறந்துவிட்டனர். இதில் ஒரு ஆலய பக்கதரும் கொல்லப்பட்டார். ஆலயத்திற்கு சேதம் விளைவித்ததாலும் பக்தரைக் கொன்றதாலும் அவர்கள் இருவரும் நரகத்திற்கு அனுப்பப்பட்டனர். நரகத்திற்குச் சென்ற இருவரும் அங்கு தமது சேவையைத் தொடர்ந்தனர். மருத்துவர் அங்குள்ளவர்களின் நோய்களைக் குணப்படுத்தினார். பொறியிலாளர் குளிரூட்டி, மலசல கூட வசதிகள், நல்ல இருப்பிட வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தினார். நரகத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் வாழத் தொடங்கினர்.

    கடவுளிடம் நரகம் பல வசதிகளைப் பெறுகிறது என்று யாரோ போட்டுக் கொடுத்துவிட்டார்கள். கடவுள் நரகத்தின் பொறுப்பாளியை அழைத்து நரகத்தில் பாவிகள் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அறிந்தேன். அங்கு என்ன நடக்கிறது என்று வினவினார். நரகப் பொறுப்பாளி மருத்துவரினதும் பொறியியலாளரினதும் சேவையை விபரித்தார். அப்போது கடவுள் அவர்கள் இருவரையும் என்னிடம் அனுப்பு என்றார். நரகத்தின் பொறுப்பாளி அனுப்ப முடியாது என்று மறுத்துவிட்டார். அதற்கு கடவுள் அனுப்பாவிடில் உன் மீது வழ்க்குத் தொடருவேன் என்றார். நரகத்தின் பொறுப்பாளி சிரித்துக் கொண்டு சொன்னார். வழக்குப் போடுவதாயின் சட்ட அறிஞர்கள் வேண்டும். அவர்கள் எவரும் உங்களிடம் இல்லை. அனைவரும் என்னிடம் தான் இருக்கிறார்கள் என்றார்.

    Sunday 4 March 2012

    ஜெனீவாவில் இலங்கையை இந்தியா ஆதரிக்கும்.

    சிங்களப் படையும் இந்தியப்படையும்
    இலங்கையில் சிங்களப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் தொடங்கும். சிங்களப் படைகளின் கைகள் ஓங்கி அவர்கள் முன்னேறும் நிலை ஏற்பட்டால் விடுதலைப் புலிகள் பின் வாங்குவது போல் பின்வாங்கிக் கொண்டே சிங்களப் படைகள் மீது தாக்குதல் தொடுத்து ஆளணி இழப்புக்களை சிங்களப்படைகளுக்கு ஏற்படுத்துவார்கள். முன்னேறும் படைகள் மீது அவ்வப்போது பக்கவாட்டில் ஊடறுப்புத் தாக்குதல்களும் பின்னால் சென்று பின்னிருந்து தாக்குதல்களும்  நடக்கும். இதனால் ஏற்படும் ஆளணி இழப்புக்களையும் காயப்பட்டு களமுனையில் இருந்து வெளியேறும் ஆளணிக் குறைவையும் சமாளிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் சிங்களப்படைகள் பின்வாங்கும். பல சிங்களப் படையினர் உயிர் தப்புவதற்காக தம்மைத் தாமே காயப் படுத்திக்கொண்டு களமுனையில் இருந்து வெளியேறுவர். பலர் தப்பி ஓடுவர்.

    2008இலும் 2009இலும் கடும் போர் நடந்த போது சிங்களப்படைகளுக்கு ஏற்பட்ட ஆளணி இழப்புக்களை இலங்கையின் அயல் நாடு ஒன்றில் இருந்து வந்த படையினர் ஈடு செய்தனர். முதலில் 10,000 படையினரும் பின்னர் இன்னொரு 10,000 படையினரும் அந்த அயல் நாட்டில் இருந்து வந்தனர். பல சிங்கள ஊடகங்கள் இதை அம்பலப்படுத்தின. அவை பொட்டு வைத்த படையினரும் தலைப்பாகை அணிந்த படையினரும் இலங்கையில் தமிழர்க்கு எதிரான போரில் பங்கேற்பதை புகைப்படங்கள் காணொளிகள் மூலம் அம்பலப் படுத்தின. இப்படைகள் எந்த நாட்டில் இருந்து வந்தன என்பதை எம்மால் இலகுவில் ஊகிக்க முடியும்.

    மனித உரிமைக் கழகத்தில் எருமையாகச் செயற்பட்ட இந்தியா
    2009மே மாதத்தில் இலங்கைப் போர் முடிந்தவுடன் அதற்கு இந்தியா வழங்கிய பங்களிப்பு சரித்திரதில் இடம்பெறாமல முடி மறைக்கப்படலாம் என ஒரு படைத்துறை ஆய்வாளர் எழுதினார். இலங்கையில் அதிபர் மஹிந்த ராஜ்பக்ச உடபடப் பலர் நாம் இந்தியாவின் போரை நடாத்தி முடித்தோம் என்றும் இந்தியாவின் உதவியின்றி நம்மால் போரை நடாத்தி முடித்திருக்க முடியாது என்றும் தெரிவித்து வருகின்றனர். போர் முடிந்தவுடன் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை அழைத்து இந்தியா தன்னிடம் இலங்கை போர்க்குற்றம் புரிந்தமைக்கான செய்மதி ஆதாரப் படங்கள் இருப்பதாகக் கூறி இனி நீங்கள் எம் சொற்படி கேட்க வேண்டும் என்று கூறினர். இந்தியாவின் நோக்கம் இலங்கையில் 13வது திருத்தத்தை அமூல் படுத்த இந்தியா சொல்வதை இலங்கை கேட்க வேண்டும் என்பதே.  அப்போது இலங்கை போரின் போது கொழும்பு டில்லி இடையிலான உரையாடல்களின் ஒலிப்பதிவுகள் தம்மிடம் இருப்பதாகக் கூறி அதை தாம் அம்பலப் படுத்துவோம் என்றார். அதன் பின்னர் இந்தியா அடங்கி விட்டது. இதன் பின்னர் இலங்கை சொற்படி ஆடிய இந்தியா 2009இல் ஜெனிவாவில் நடந்த மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடரில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் போரின் போது மனித உரிமைகள் மீறியதைக் கண்டிக்கும் தீர்மானத்தை மனித உரிமைக் கழக நாடுகளிடை கடும் பிரசாரம் செய்து அதை இலங்கைக்குப் பாராட்டும் தீர்மானமாக மாற்றியது. அப்படிச் செய்ததை இலங்கைப் போரின் பொறுப்புக் கூறல் தொடர்பாக அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு பெரிய தவறு எனச் சுட்டிக்காட்டியது.

    இப்போது பெப்ரவரி 27-ம் திகதி முதல் மார்ச் 23-ம் திகதி வரை ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. மேற்கு நாடுகள் முதலில் இலங்கை அரசின் மீளிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அடிப்படையில் தீர்மான முன் மொழிவை வரைய இருந்தன. இலங்கைக்கு  கணிசமான ஆதரவு கிடைக்காது என்பதை உணர்ந்து கொண்ட மேற்கு நாடுகள் இப்போது தீர்மானத்தை ஐநா நிபுணர்குழு அறிக்கையை அடிப்படையாக வைத்து தீர்மான முன் மொழிவை வரையும் சாத்தியம் இருக்கிறது.


    இலங்கையின் சில்லறைக் கைக்கூலியாக இந்தியா
    அண்மைக் காலங்களில் இந்தியா ஒரு இலங்கையின் சில்லறைக் கைக்கூலி போல் செயற்பட்டு வருகிறது.  அப்படிப் பட்ட இந்தியாவால் இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைக் கழகத்தில் வாக்களிக்க முடியாது. தமிழ்நாட்டு மக்களின் "கொந்தளிப்பை" கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் டில்லிக்கு இல்லை. அவை வெறும் கூச்சல்கள் மட்டுமே என்று டில்லி நன்கு அறியும். தேர்தலில் காங்கிரசுக் கட்சி தமிழ்நாட்டில் பெரும் தோல்வியைச் சந்திக்கலாம் என்ற பயம் ஆளும் கட்சிக்கு இல்லை. ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டால் என்ன எதிராகச் செயற்பட்டால் என்ன காங்கிரசுக் கட்சி தமிழ்நாட்டில் தோல்வியடைவது நிச்சயம். தமிழ்நாட்டில் வெற்றி பெற்று வரும் கட்சிக்கு சில மந்திரிப்பதவிகளைக் கொடுத்து அவற்றை கூட்டணியில் இணைத்து காங்கிரசால ஆட்சி அமைக்க முடியும். இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படாவிடில் இந்தியாவின் தமிழர்களுக்கு எதிரான பல குற்றங்கள் அம்பலமாகும்.

    Featured post

    உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

    விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...