Saturday 17 December 2016

அமெரிக்காவின் UNDERWATER DRONEஐ சீனா அபகரித்தது



 அமெரிக்காவில் அதிபர் பதவிக்கு புதியவர் வரும்போது அவருக்கு சவால் விடும் வகையில் சீனா செயற்படுவதுண்டு என அமெரிக்கா குற்றம் சாட்டுவதுண்டு. 2001-ம் ஆண்டு ஜோர்ஜ் புஷ் பதவி ஏற்றவுடன் அமெரிக்காவின் EP-3 என்னும் வேவு விமானத்துடன் சீனாவின் போர் விமானம் வானில் மோதல் செய்து அந்த வேவு விமானத்தையும் அதன் ஊழியர்களையும் இரண்டு வாரங்கள் தடுத்து வைத்திருந்தது. பின்னர் அரசுறவியல் நடவடிக்கைகள் மூலம் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

2009-ம் ஆண்டு பராக் ஒபாமா பதவி ஏற்ற பின்னர் தென் சீனக் கடலில் USS Impeccable என்னும் அமெரிக்காவின் கடற்படைக்கலத்திற்கு சவால் விடும் வகையில் சீனாவின் கரையோரக் காவல் கப்பல்களும் மீன் பிடிக் கப்பல்களும் செயற்பட்டன.

2016- ம் ஆண்டு டிசம்பர் 16-ம் திகதி அமெரிக்காவின் UNDERWATER DRONE  அதாவது ஆளில்லாமல் கடலடியில் செயற்படக் கூடிய சிறு நீர்மூழ்கிக் கப்பலை சீனக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இது ஒரு திருட்டு என அமெரிக்க ஊடகங்கள் விபரித்துள்ளன. உலகச் சட்டங்களுக்கு அமைய சீனா தான் கைப்பற்றிய UNDERWATER DRONE உடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என அமெரிக்காவின் படைத்துறை நிறுவனமான பெண்டகன் சீனாவிடம் வலியுறுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸின் சூபிக் பே என்னும் கடற்கரைக்கு வட மேற்காக 200மைல் தொலைவில் இச்சமபவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் Bowditch வேவுக் கப்பலில் இருந்து இயக்கப்பட்ட இந்த UNDERWATER DRONE அந்தக் கப்பலில் பணிபுரிபவர்களின் கண் முன்னே அவர்களின் வானொலியூடான ஆட்சேபனையையும் பொருட்படுத்தாமல் சீனக் கடற்படையினர் ஒரு படகில் சென்று அதைக் கைப்பற்றினர்.  

அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பும் சீனா அமெரிக்கவின் UNDERWATER DRONE திருடியதாகத் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

என்ன இந்த UNDERWATER DRONE?
நீருக்குக் கீழான வானொலித் தொடர்புகள் சிரமமானவை என்பதால் அவற்றை இலகுவாக்குவது UNDERWATER DRONE இன் பணிகளில் முக்கியமானதாகும். இதனுள் கணனிகளும் உணரிகளும் தொடர்பாடல் கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கும். எதிரியின் கடற்கலன்களின் நடமாட்டங்களை அறிவதற்கும் UNDERWATER DRONE பயன்படுத்தப்படுகின்றன. 2015-ம் ஆண்டின் இறுதியில் இருந்து அமெரிக்கா இவற்றைச் சேவையில் ஈடுபடுத்தியது.

ஏன் சீனா அபகரித்தது?
ஐக்கிய அமெரிக்காவின் படைத்துறை இரகசியங்களை திருடுவதில் சீனா எந்த வித தயக்கமோ கூச்சமோ காட்டுவதில்லை. அமெரிக்கா பல பில்லியன்கள் செல்வு செய்து கண்டு பிடிக்கும் தொழில்நுட்பங்களை சீனா இலகுவாக இணையவெளியூடாக ஊடுருவித் திருடுகின்றது என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது. சினா தானும் ஒரு UNDERWATER DRONEஐ உருவாக்குவதற்கும் அமெரிக்காவின் கடலடித் தகவல் திரட்டும் நடவடிக்கைகளுக்குப் பதில் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த அபகரிப்பு உதவும். இந்தச் சிறு நீர்முழ்கிக் கப்பலிலும் பார்க்க அதில் உள்ள கருவிகளின் தொழில்நுட்பம் படைத்துறை முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். கடலுக்கடியில் நீர்மூழ்கிக் கப்பல்கள் போக முன்னர் அந்தன் தட்ப வெப்ப நிலைகள் உப்புத்தன்மை போன்றவற்றை அறிந்து வைத்தல் முக்கியமானதாகும். இதற்கும் இந்த UNDERWATER DRONEகள் பாவிக்கப்படுகின்றன. அமெரிக்கப் பாதுகாப்புத்துறை ஊடகம் ஒன்றில் இந்தத் தகவல் இருந்தது:-

  • "The USNS Bowditch (T-AGS 62) and the UUV -- an unclassified "ocean glider" system used around the world to gather military oceanographic data such as salinity, water temperature, and sound speed - were conducting routine operations in accordance with international law about 50 nautical miles northwest of Subic Bay, Philippines, when a Chinese Navy [People's Republic of China] DALANG III-Class ship (ASR-510) launched a small boat and retrieved the UUV. 



திருப்பிக் கொடுக்கப்படும்
இரசிய ஊடகம் ஒன்றில் வெளியான தகவலின்படி சீனா இந்த நட்பா பகையா என்ற சோதனை identification friend or foe (IFF) checks
 செய்த பின்னர் திருப்பிக் கொடுப்பதாக அமெரிக்காவிடம் கூறியுள்ளது. அது அதில் உள்ள கருவிகள் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்கான கால அவகாசத்தை சீனாவிற்கு வழங்கலாம்.

பிந்திக் கிடைத்த செய்திகளின் படி அமெரிக்கப் படைத்துறை நிறுவனமான பெண்டகன் சீனா தான் கைப்பற்றிய UNDERWATER DRONEஐத் திருப்புக் கொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...